Wednesday, December 17, 2008

இரவு

பகல் இறந்துபோனதும்
இரவு கருப்பணிந்து
இரங்கல் தெரிவிக்கிறதோ?

இந்த இரவு,
ஏன் கதிரவனைக் கடன்வாங்கி
நட்சத்திரங்களாய் நறுக்கிப்போட்டது?

பகலைப் பணயம் வைத்து
இரவு போடும் ஆட்டமா இது?
வெயிலில் வறுக்கப்பட்டே
வானம் கருகிப்போனதா?

யாருமறியாமல் இரவு வேளையில்
தலை நரைத்த மேகங்கள்
தடவிக் கொண்ட சிகைச்சாயமா?

பகலே! நீ ஒரே ஒரு ஒளிதான்.
இரவைப் பார்
இதில் எத்தனை ஒளிவெள்ளம்.

3 comments:

  1. Night Mourning for Mornings death...
    really good.. :)

    ReplyDelete
  2. இந்த இரவு,
    ஏன் கதிரவனைக் கடன்வாங்கி
    நட்சத்திரங்களாய் நறுக்கிப்போட்டது?
    ///arpudhamaana vari

    ReplyDelete