Wednesday, December 17, 2008

புதுக்கவிதைகள்

வானம் குடைமடக்கியபின்னும்
நிலவில் மழை பொழிந்தது.

தென்றல் மாளிகையின்
ஜன்னல்கள் திறந்தன.

வானவில் இரசிக்காதவன்
வெறுமையில் லயித்தான்.

நெலிகோலம் விரும்பாதவள்
இரங்கோலி இரசித்தாள்.

பனிபடர்ந்த சாலையிலே
விளக்கணைத்து சில விடியல்கள்.

பூ சிரிக்காத செடியில்
முள் மலர்ந்தது.

நிழல்தராத மரக்கிளையில்
நெருஞ்சிக்காட்டின் சுள்ளிகள்.

மரபுமரங்கள் விழுதுவிடுமுன்
புது(க்க) விதைகளின் விழுதுகள் வேர்விட்டன.

தமிழ்நதி வற்றுமுன்
தலைதூக்கினோம்.

மேகங்களை மென்மையாக்கி
தண்ணீர் சிற்பங்கள் செய்தோம்.

1 comment:

  1. comments எழுத word verification ஐ நீக்கிவிடவும்.( நீங்கள் விரும்பினால் மட்டும்).

    ReplyDelete